மாறி மாறி முத்தம்.. காதல் பறிமாற்றம்.. ஜோடியாக வெளியிடப்பட்ட நிலானி- காந்தியின் கிளுகிளுப்பு வீடியோ
நடிகை நிலானியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அவரது காதலன் காந்தி லலித் குமாரும் மாறி மாறி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ என கூறிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை நடிகை நிலானியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அவரது காதலன் காந்தி லலித் குமாரும் மாறி மாறி முத்தம் கொடுத்து ஐ லவ் யூ என கூறிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை கூறியவர் சீரியல் நடிகை நிலானி. இதுதொடர்பாக நிலானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உதவி இயக்குநாரான காந்தி லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்தார் நிலானி. இதையடுத்து நிலானி மற்றும் காந்தியை விசாரித்த போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
காதலன் தற்கொலை
இந்நிலையில் நேற்று சென்னை கேகே நகரில் காந்தி திடீரென தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொஞ்சி குலாவும் வீடியோ
இந்நிலையில் காந்தி லலித்குமாரும் நிலானியும் ஒன்றாக கொஞ்சி குலாவும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் செப்டம்பர் 4ஆம் தேதி மெட்டி போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கிறார் காந்தி லலித்குமார்.
உயிர் வாழறதே உனக்காகதான்
இருவரும் சேர்ந்துள்ள அந்த வீடியோவில் உதவி இயக்குநரான காந்தி லலித்குமார் கூறுவதாவது,
உன்னை எப்பவும் மிஸ் பண்ணக்கூடாது, உன் கூடவே இருக்கனும், நான் உயிர் வாழறதே உனக்காகதான்.
மெட்டி போட்டு திருமணம்
நேற்று எங்கள் திருமண நாள் செப்டம்பர் 4, மெட்டி போட்டு அவள கல்யாணம் பண்ணியிருக்கேன். பல முறை என்கிட்ட மெட்டி கேட்டிருக்கா. கடவுள் செயலால் இப்போதுதான் என்னால வாங்கி கொடுக்க முடிஞ்சது.
அம்மும்மா ராஜாத்தி
உலகத்துல யாருக்கும் இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்கமாட்டா. என் தங்கம், என் செல்லம் என் அம்மும்மா என் ராஜாத்தி, என உருகியிருக்கிறார் காந்தி லலித்குமார்.
மாறி மாறி முத்தம்
அப்போது அவருடன் சேர்ந்திருக்கும் நடிகை நிலானி ஐ லவ் யூ என்கிறார். காந்தி லலித்குமாரும் ஐ லவ் யூ என கூறி நிலானியின் நெற்றி மற்றும் கன்னத்தில் முத்தமிடுகிறார். பதிலுக்கு நிலானியும் முத்தமிடுகிறார்.
படுக்கையறை
இதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் ஒன்றாக படுக்கையறையில் இருக்கும் அந்தரங்க போட்டோக்களும் வெளியாகியுள்ளது. பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர்.
ஏமாற்றம்
இவ்வளவு நெருக்கமாக இருந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காந்தி வற்புறுத்துவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார் நிலானி. இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமலேயே காந்தி தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.