வித்யாதன் கல்வி உதவித்தொகை - மாணவர்களே விண்ணப்பியுங்கள்
இரண்டு இலட்சத்திற்குக் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
சென்னை: சரோஜினி தாமோதரன் நிறுவனம் திரு.S.D.ஷிபுளால்,(இன்போசிஸ்) மற்றும் திருமதி.குமாரி ஷிபுளால்,(காப்பாளர்) கட்டமைப்பு பெற்று வித்யதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சரோஜினி தாமோதரன் நிறுவனம் 1500மாணவர்களுக்கு உதவிசெய்து 6800உதவிப்பணம் வழங்கி இருக்கிறது. 81மருத்துவர்கள், 223பொறியாளர்கள், 48செவிலியர்கள் மற்றும் பலர் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். அவர்கள் இப்போது வேலையில் உறுதிபடுத்தி தற்போது மற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்து வருகின்றனர்.
இந்த கல்வி உதவித் தொகை பெறும் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்குக் கீழ் பெறும் பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களின் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
பத்தாம் வகுப்பு 2017 பொதுத்தேர்வில் 90சதவீதத்திற்கும் மேல்(75சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உடைய மாணவர்கள்)மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
12ஆம் வகுப்பு 2017 பொதுத்தேர்வில் 85 சதவீதத்திற்கும் மேல்(75சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உடைய மாணவர்கள்) மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் https://www.vidyadhan.org/ என்னும் இணையத்தள முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் August 20,2017க்கு முன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கேள்விகளுக்கு, [email protected] என்னும் முகவரிக்கு எழுதுங்கள் அல்லது 7339659929-ஜேக்கப் என்பவரிடம் தொடர்புக் கொள்ளுங்கள்.