உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக விஜயகாந்த் வாழ்த்து
உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.
நாளை மே தினம் எனப்படும் உழைப்பாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிடுகையில், தொழிலாளர்களை மதித்தால் உயிர் கொடுப்பான் தோழன் என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு நிறுவனமோ, தொழிலோ தடுமாறும் போது தோளோடு தோள் நின்று அந்த நிறுவனத்தையும், அந்த தொழிலையும் எந்த பலனும், நேரமும் பார்க்காமல், உழைத்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற நிறுவனங்கள் பல...
தொழிலாளர்களை மதித்தால் உயிர் கொடுப்பான் தோழன் என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு நிறுவனமோ, தொழிலோ தடுமாறும் போது தோளோடு தோள் நின்று அந்த நிறுவனத்தையும், அந்த தொழிலையும் எந்த பலனும், நேரமும் பார்க்காமல், உழைத்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற நிறுவனங்கள் பல...
— Vijayakant (@iVijayakant) April 30, 2018
உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.