தமிழக அரசை கலைக்க வேண்டும்... பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்
தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் அவர்களை குருவி சுடுவது போல் சுட்டுக் கொன்றனர். இதில் 12 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்பு, வாயில் சுடுவதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்துக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Letter to Honorable Prime minister @narendramodi ji, regarding Firing by Tamilnadu Police towards Public who are protesting against Sterlite factory. #BanSterlite pic.twitter.com/nXtVDLDyID
— Vijayakant (@iVijayakant) May 23, 2018
அதில் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்டது. தமிழக அரசு நீடிக்க வேண்டுமா? என ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.