For Quick Alerts
For Daily Alerts
Just In
வள்ளியூர் பிரசார கூட்டத்தில், பாதுகாவலர் முதுகில் பளார்விட்ட விஜயகாந்த்
நெல்லை: வள்ளியூரில் மீண்டும் தனது பாதுகாவலரை தாக்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று இரவு விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு தனது காரை நோக்கி விஜயகாந்த் நடந்தபோது, தொண்டர்கள் அவரை நெருங்கி வந்து பேச முயன்றனர்.
இதை பாதுகாவலர்கள் தடுத்தபடி இருந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதிருப்தியடைந்த விஜயகாந்த், காரின் அருகே தொண்டர்களை தடுத்து வைத்து போராடிக்கொண்டிருந்த பாதுகாவலர் முதுகில் ஒரு அடி போட்டார்.
இருப்பினும் அந்த பாதுகாவலர் மக்களை தடுப்பதிலேயே குறியாக இருந்தார். இதனால் விஜயகாந்த் அடித்ததை கவனிக்கவில்லை.
Comments
vijayakanth tamilnadu assembly election 2016 security beaten தமிழக சட்டசபை தேர்தல் 2016 விஜயகாந்த் பாதுகாவலர் அடி
English summary
Vijayakanth beaten up his security guard in Vallioor.
Story first published: Friday, April 29, 2016, 8:23 [IST]