கேப்டன்... நல்லா பாத்துச் சொல்லுங்க.. இதுக்கு பேரு காறி துப்புவதா? பாடி லாங்குவேஜா? #vijayakanth
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே நிதானம் இழந்து காறி துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அது தன்னிச்சையான உடல் அசைவு என்று பிரஸ் கவுன்சிலில் அப்பட்டமாக பொய் கூறியுள்ளார் விஜயகாந்த்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதியன்று சென்னை, அடையாறு மத்திய கைலாஸ் பகுதியில் தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
அதற்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை நோக்கி காறிப் துப்பி தரக்குறைவாக பேசினார்.
ஜெயலலிதாகிட்ட கேளுங்க...
அப்போது விஜயகாந்த் பேசியதாவது:
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது; இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா?
காறி துப்பிய விஜயகாந்த்
கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்க பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ......... (காறி துப்பினார்)
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், பிரஸ் மீட் கொடுத்தா கேட்போம் என்கிறார்..
அதற்கும், ஆமா நீங்க கேட்பீங்க... நீங்க போய் கேளுங்க பிரஸ் மீட் கொடுங்கன்னு...கேளுங்க..
ஏன்டா என ஏகவசனம்
ஏன்டா உங்களை உங்களை இவ்வளவு நேரம் நிக்க வெச்சேனே நீங்க கேளுங்க பார்ப்போம்..
உங்க மொதலாளிக சொன்னா போவீங்க... தைரியமா...
இல்லைன்னா அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்க...
இவ்வாறு விஜயகாந்த் கூறியிருந்தார்.
பச்சை பொய்
தற்போது ஜஸ்ட் அது உடல் அசைவு என அசால்ட்டாக அண்டப் புளுகை பிரஸ் கவுன்சிலில் கூறியிருக்கிறார் விஜயகாந்த்.