2 நாளைக்கு ரோடு பளிச்சுன்னு இருக்கும்... முதலீட்டாளர் மாநாடு குறித்து விஜயகாந்த் 'கருத்து'
சென்னை: தமிழக அரசின் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பது "கமிஷனுக்காகத்தான்" போடப்படுகிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
புரிந்ந்ந்ந்து.....உணர்ந்ந்ந்து..... ஒப்பந்தம்....அதுதான் புரிந்து உணர்வு ஒப்பந்தம்தான்... ( கைவிரல்களால் காசு என்பதை சுட்டிக்காட்டியபடி) அட காசு.. எல்லாம் கமிஷனுக்குத்தான் சார்..
இன்று வழிநெடுக சென்னை சுத்தமாக இருக்கிறது.. இது இன்றும் நாளையும்தான்.. அதுவும் டிரேட் சென்டரில் இருந்து ஏர்போர்ட் வரைக்கும்தான்..
செளத் கொரியாவில் தண்ணீர் ஊற்றி சாலையை கழுவுவார்கள்... இங்கெல்லாம் தண்ணீர் ஊற்றியா கழுவுகிறார்கள்..?
தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை.. அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.. நேரு அண்ணா எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட்டணி பற்றி பேசுறதே அதிகம்னு சொல்லியிருக்காங்க..
சட்டசபையில் ஜெயலலிதாவை பாராட்டி மட்டுமே பேசுவதால் நான் அங்கு செல்வதில்லை.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.