இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:,
கடந்தமாதம் இலங்கையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பிரதான எதிர்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவராக இலங்கை தமிழரான இரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்திகேட்டு, தமிழக எதிர்க்கட்சித்தலைவரான நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
இலங்கையின் ஒரு சிறந்த எதிர்கட்சித்தலைவராக இரா.சம்பந்தன் சிறப்பாக செயல்பட்டு போரினால் பாதிக்கப்பட்டு தங்கள் மறுவாழ்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும், இலங்கை தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்.
அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.