தமிழகம் முழுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம்.. பணிகள் பாதிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம் நடத்தியதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் அடையாள போராட்டம் நடத்தியதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக வருவாய் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. குறிப்பாக காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடத்தை கூடுதலாக கவனித்து வரும் இதர கிராம நிர்வாக அதிகாரிகள் 5 மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கப்பட்டது.
அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் 5 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதால் அதிருப்தியில் இருந்தனர். இதை கண்டித்து தொடர்ந்து அவர்கள் முறையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ஆன்லைன் சான்றுக்கு தேவையான மோடம், இன்டர்நெட் இணைப்புக்கு செலவின தொகை விஏஓக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விஏஓக்கள் தங்களது லேப்டாப்புகளை தாலுகா அலுவலகத்தில் ஓப்படைத்து வருகின்றனர்.
இந்த காரணத்தால் அவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் வருவாய் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொது மக்கள் திணறி வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 29ம் தேதி நாளை அவர்கள் சென்னையில் உள்ள வருவாய் கிரா்ம நிர்வாக ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவெடுத்துள்ளனர்.