For Quick Alerts
For Daily Alerts
Just In
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகள்... கிராம மக்கள் மீட்டனர்!
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி அதே திடத்தில் நீடிப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அக்தியாற்றில் திடீரென நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், காலையில் ஆற்றைக் கடந்து சென்ற விவசாயிகள் மாலை வீடு திரும்ப முடியாமல் தவிப்பிற்கு ஆளானார்கள். துணிந்து ஆற்றைக் கடக்க நினைத்த சிலர் வெள்ளத்தில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து வந்த அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர், இரவு முழுவதும் ஆற்றின் மறு கரையிலேயே தவித்த விவசாயிகள் சிலரையும் கிராம மக்கள் பத்திரமாக ஆற்றைக் கடக்க உதவினர்.
Comments
English summary
Near Srivilliputhur, the villagers rescued farmers, who was trapped in flood.
Story first published: Wednesday, May 13, 2015, 11:22 [IST]