மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கொடூரக் கணவன் - வீடியோ
குடும்பத் தகராறில் மனைவி புவனேஸ்வரி மீது நல்லான் என்பவர் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
விழுப்புரம்: குடும்ப சண்டையில் மனைவியில் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு கணவன் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் நல்லான். இவருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. நல்லானுக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது என தெரிகிறது.
சம்பவத்தன்னு வழக்கம் போல், நல்லான் குடித்துவிட்டு வந்துள்ளார். அதுகுறித்துக் கேட்ட மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று நல்லான் தப்பித்து விட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது புவனேஸ்வரி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். அதன்பின்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஒட்டிய நல்லானையும் தேடி வருகின்றனர். குடிநோய்க்கு இரையாகி தமிழகத்தில் இதுபோல பல குடும்பங்கள் நிம்மதியை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.