வாழும் லோகம் ஏழும், உந்தன் ராகம் சென்று ஆளும்.. இளையராஜாவுக்கு வைரமுத்து வாழ்த்து
பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு வைரமுத்து வைரமுத்து தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் சிறந்து விளங்கியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் டிவிட் செய்துள்ளார்.
பத்ம விருதுகள் பெறும்
— வைரமுத்து (@vairamuthu) January 26, 2018
85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்”
- என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.
அவர் தனது டிவிட்டில் ''பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
"காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்"
- என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இளையராஜாவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.