For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் விவகாரத்தில் போலீசால் தாக்கப்பட்ட விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் உதவி

By Manjula
Google Oneindia Tamil News

சென்னை: டிராக்டர் விவகாரத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட விவசாயி பாலனுக்கு, உதவ நடிகர் விஷால்முன்வந்திருக்கிறார்.

தஞ்சாவூர் விவசாயி பாலன் தாக்கப்பட்ட செய்தி, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரூ.9௦௦௦ கோடி கடனுடன் நாட்டை விட்டு ஓடிப்போன விஜய் மல்லையாக்களை விட்டுவிடுபவர்கள், கடனை நேர்மையாக கட்ட நினைக்கும் அப்பாவி மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் இது குறித்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

Vishal Helps for Farmer Balan

பாலனைத் தாக்கிய விவகாரத்தில் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஷால் விவசாயி பாலனுக்கு உதவ முன்வந்திருக்கிறார். அவர் இது குறித்து "பாலன் நீங்கள் யாரென்றே தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்பதற்காக உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.

உங்கள் கடன் தொகை எவ்வளவு என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியிருக்கிறார்.

English summary
Vishal tweeted "Balan.i don't know u. But u r a farmer. I pledge my support to u. Monetarily. I don't know ur loans.but accept my support.god bless".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X