குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் காணவில்லை.. வாக்காளர் வழக்கால் பரபரப்பு
குன்னம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் காணவில்லை என்று வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரான ஆர்.டி. ராமச்சந்திரன் குன்னம் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இவரைக் காணவில்லை என்று வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆர்.டி.ராமச்சந்திரன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்றதோடு சரி. மக்கள் என்ன ஆனார்கள். மக்கள் நலத் திட்டங்கள் என்ன ஆனாது என்பது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தொகுதி மக்களை மீண்டும் வந்து சந்திக்கவும் இல்லை. இதனால் அந்தத் தொகுதி மக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் கடுப்பான வாக்காளர் ஒருவர், குன்னம் தொகுதி எம்எல்ஏவான ஆர்.டி. ராமச்சந்திரன் காணவில்லை என்று வாக்காளர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை நாளைக்கு வர உள்ளது. இதே போன்று தொகுதிப் பக்கம் திரும்பிக் கூட பார்க்காத எம்எல்ஏக்கள் மீது வழக்குகள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.