ஆர்கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தனி அறையில் வைக்கப்பட்ட 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக அதாவது வரும் 11ஆம் தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.