கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் 4வது நாளாக நீடிப்பு!
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று 4வது நாளாக நீடிக்கிறது.
கும்பகோணம்: கதிராலமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று 4வது நாளாக நீடிக்கிறது.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் குடிநீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் இன்றும் நீடிக்கிறது. மேலும் கதிராமங்கலத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்ககோரி அய்யனார்கோவில் திடலில் கிராம மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.