கருணாநிதியின் கணீர் குரல் மீண்டும் கேட்க வேண்டும்.. வைகோ Exclusive
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு வைகோ ஒன் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு வைகோ ஒன் இந்தியாவிற்கு பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று என்பதால் கோபாலபுரம் மட்டும் இல்லாமல் மொத்த தமிழகமும் கொண்டாடிக்கொண்டுள்ளது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார்.
அவரது பிறந்த நாளை தமிழகம் முழுக்க திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். பல கட்சி தலைவர்கள் நேற்றில் இருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ அவருக்கு காலையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் நேற்று திருவாரூரில் நடந்த பிறந்த நாள் விழாவிலும் பேசினார்.
மேலும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு வைகோ சிறப்பு பேட்டியளித்துள்ளார். ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார்.
ஆருயிர் அண்ணன் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் இன்று 94 அகவையை தாண்டி 95 வது அகவையில் அடி எடுத்து வைக்கிறார். அவர் 100வது அகவை காண்பதற்குள்ளாக அவரது காந்த குரல், கணீரென எழுகிற கம்பீர குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்.
மீண்டும் அந்த குரல் ஒலித்து, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்று சொல் அவர் நாவில் இருந்து வெளியே வரும் போது, பறவைகள் பத்தாயிரம் சிறகடிப்பதை போல ரசிகர்கள் கரவொலி எழுப்பிவர்களே, அந்த கண்கொள்ளா கட்சியை காண்பதற்கு இயற்கை எனக்கு அருள் அளிக்க வேண்டும் என்று விழைகிறேன்