இரட்டை இலை இல்லாமல் போட்டியிட தயாராக இருக்கிறோம் - ஓஎஸ் மணியன் - வீடியோ
தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட எங்களுடைய அணி தயாராக இருக்கிறது என்று அமைச்சர் ஒஎஸ் மணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட எங்களுடைய அணி தயாராக இருக்கிறது என்று தமிழக ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜவுளி உற்பத்திக்கு தற்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி, கைத்தறி, தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு 40 சதவீதம், மாநில அரசு 9 சதவீத பங்களிப்புடன் தொழில் அதிபர்கள் 51 சதவீத முதலீடு செய்தால் நெல்லை உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
அதேபோல், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு செய்யும் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.
இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலும் எங்களின் அணி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெரும் என்றும் ஓஎஸ் மணியன் கூறியுள்ளார்.