கமல்ஹாசன் தேர்தல் களத்திற்கு வந்தால் அவரை சந்திக்க தயார்.. அமைச்சர் சவால்!
நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்திற்கு வந்தார் அவரை சந்திக்க தயார் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்திற்கு வந்தார் அவரை சந்திக்க தயார் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில்இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
நடிகர் கமல்ஹாசன் நேரத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருகிறார். தேர்தல் களத்திற்கு கமல் வந்தால் அவரை சந்திக்க தயார். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.