காவிரியைக் கேட்டால் கர்நாடகாவிலிருந்து துணைவேந்தர் வருகிறாரே.. கமல்ஹாசன் கோபம்
Recommended Video
சென்னை: கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை கேட்டால், துணை வேந்தர் வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கமல் வெளியிட்டுள்ள தகவல்:
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?
— Kamal Haasan (@ikamalhaasan) April 6, 2018
கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றன. இந்த நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு டுவிட் வெளியிட்டுள்ளார்.