அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.வுக்கு நடந்தது பற்றி எதுவுமே தெரியாதே.. பொன்னையன் திடுக்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியாது என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியாது என பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சசிகலா குடும்பத்தினர் தான் ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற போது அவரை சசிகலா வீடியோ எடுத்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார். நைட்டியில் உள்ள அந்த வீடியோவை வெளியிடுவதை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதாலேயே அதனை வெளியிடவில்லை என்றும் புதிய தகவலை அவர் வெளியிட்டார்.
இந்நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்னவென்றே எங்களுக்கு தெரியாது என பொன்னையன் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தினர் சொல்ல சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சசிகலா குடும்பத்தை தவிர அமைச்சர்கள் யாரையுமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என பொன்னையன் கூறியுள்ளார். வருத்தம் தெரிவிக்க வேண்டியது சசிகலா குடும்பம் தான், நாங்கள் அல்ல என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.