For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாடுபிடி வீரர்களுக்கு நடிகர் அரவிந்த் சாமி அட்வைஸ் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

 we Should ensure the safety aspects in Jallikattu - Arvind Samy

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்."நாம் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் போது, அதனை பார்க்க வரும் பார்வையாளர்களும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படாதவாறு நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்."என தனது டிவிட்டர் பக்கத்தில் அரவிந்த் சாமி அறிவுறுத்தியுள்ளார்.

English summary
we Should ensure the safety aspects in Jallikattu, says Actor Arvind Samy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X