ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம்.. ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியார் பேச்சு
ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு சாதனை விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், ஆங்கில மொழிகளில் அரசின் ஓராண்டு சாதனை மலரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம் என்றார். உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் தரும் இயக்கம் அதிமுக: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த தான் கட்சியில் படிப்படியாக வளர்ந்து முதல்வராகியுள்ளேன் என்றும் அவர் கூறினார். மேலும் முதல்வராக பதவியேற்றது முதல் 50000 கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 15 டிஎம்சி நீர் தேங்கும் வகையில் மேட்டூர் அணை தூர்வாரப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வறட்சியில் இருந்து தமிழகம் மீள துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.