ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்போம்.. எல்லோரும் சிறை செல்வார்கள்.. ஸ்டாலின் அதிரடி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இதில் அவ்வப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஜெயலலிதாவிற்கு சரியான மருத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து வெளியாகும் தகவல்களால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் இதுகுறித்து மக்களிடம் பேசினார்.
அதில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். நாங்கள் இந்த வழக்கை முறையாக விசாரிப்போம். ஜெயலலிதாவின் மறைவுக்கு காரணமானவர்கள் சிறை செல்வார்கள்.
யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவரது மரணத்திற்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாமல் சர்ச்சையாக உள்ளது. இந்த சந்தேகங்கள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் களையப்படும்.
கஜா புயலில் இன்னும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கி விட்டதாக கூறினார். ஆனால் அது உண்மையில்லை. அமைச்சர்கள் பொய் சொல்கின்றனர்.
அதிமுக கட்சி பாஜகவின் அடிமையாக இருந்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அடிமையான அதிமுகவுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், என்று ஸ்டாலின் பேசினார்.