For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பிரெய்ன் வாஷ்" ஆடியோ.. நிர்மலாதேவியை விசாரிப்பேன்... அதிகாரி சந்தானம் தகவல்

ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளதாக விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதைப் பற்றி நிர்மலா தேவியிடம் விசாரணை- விசாரணை அதிகாரி சந்தானம்

    சென்னை: ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த உள்ளதாக விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

    கல்லூரி மாணவிகளை அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Investigating will be conduct Nirmala Devi in the audio issue: Investigative officer Santhanam

    இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

    நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானமும் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி சந்தானம் ஆடியோ விவகாரம் குறித்து நிர்மலாவிடம் சிறையில் விசாரணை நடத்தவுள்ளேன் என்றார்.

    வழக்கில் கைதான உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமியிடமும் விசாரணை நடக்க உள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாம் கட்ட விசாரணை சனிக்கிழமை வரை அருப்புக்கோட்டையில் நடைபெறும் என்றும் விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.

    English summary
    Investigative officer Santhanam said that investigating will be conduct Nirmala Devi in the audio issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X