For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.. ஸ்டாலின் உறுதி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஸ்டாலின் பேசினார். விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டு என்ற தலைப்பில் இந்த விழா நடந்தது.

We will protest against TN Governor until he resign says M K Stalin

இதில் ஸ்டாலின், நக்கீரன் ஆர்.கோபால், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஸ்டாலின், ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார்.
பத்திரிக்கை சுதந்திரத்தை ஆளுநர் முடக்க பார்க்கிறார். இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குள்ளாகி உள்ளது.

மாநில அரசை ஆளுநர் கட்டுப்படுத்த பார்க்கிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. ஆளுனரின் பேச்சை கேட்டு தமிழக அரசு ஆடுகிறது.

ஆளுநருக்கு எதிராக நாங்கள் போராடுவோம். ஆளுநர் பதவி விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும், என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
We will protest against TN Governor Banwarilal Purohit until he resign says M K Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X