For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதி கிடைக்கும் வரை பிரிட்சோ உடலை பெற மாட்டோம்: மீனவர்கள் ஆவேசம்

இலங்கை கடற்படையினரால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோவின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: தமிழக எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த பிரிசட்சோவுக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர் அமைப்புகள் தெரிவித்தனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது அங்கு வந்த இலங்கைஇ கடற்படையினர் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை ஏதும் விடுக்காமல் சுடத் தொடங்கினர். அப்போது தப்ப முயன்ற படகில் இருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்சோவின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இதில் படகு ஓட்டுநர் சரோனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

We wont take the body of Fisherman till get justice, says Fishermen association

இதனால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மத்திய,மாநில அரசுகளின் கையாலாகாதத்தனத்தை கண்டு ஆவேசம் அடைந்துளளனர்.

இந்நிலையில் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சங்கத்தினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை பெறக் கூடாது என்று முடிவ செய்யப்பட்டுள்ளது.

We wont take the body of Fisherman till get justice, says Fishermen association

மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இத்தகைய துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The fishermen association has declared that they wont get the body of Britso till get justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X