தமிழகத்தில் இடி மின்னலுடன் நல்ல மழை இருக்கும்.. வானிலை மையம் நல்ல செய்தி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோடை மழை பல இடங்களில் பெய்து வருகிறது. கடந்த மே 4ம் தேதி தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியது.
முதல் இரண்டு நாட்கள் இந்த வெயில் மிக மிக அதிகமாக சுட்டெரித்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கோடை மழை பெய்ய தொடங்கியது.
தற்போது அக்னி நட்சத்திரத்திற்கான எந்த சுவடும் தற்போது தமிழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. முக்கியமாக பலத்த காற்றுடன் இரவு முழுக்க மழை பெய்தது.
என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திருத்தணி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்யும். கிருஷ்ணகிரி உதகை, நாமக்கல், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.