நினைக்கும் போதெல்லாம்திறந்துவிட காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு? அமைச்சரின் பேச்சால் அதிருப்தி
நினைக்கும் போதெல்லாம் திறந்துவிட காவிரி எனது பாக்கெட்டிலா உள்ளது உன அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கும்பகோணம்: நினைக்கும் போதெல்லாம் திறந்துவிட காவிரி எனது பாக்கெட்டிலா உள்ளது உன அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். நேற்று முன்தினம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் என கூறி குண்டை தூக்கி போட்டார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்தனர்.
துரைக்கண்ணு சர்ச்சை
அந்த சர்ச்சை அடங்குவதற்குள் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருப்பது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டார்.
திமுகவை விளாசினார்
அப்போது பேசிய அவர் திமுகவை சரமாரியாக விளாசினார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கு தெரியவில்லை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீர் எத்தனை நாளைக்கு வரும் என சாதாரண மக்களுக்கு தெரியும் நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லை என சாடினார்.
எங்கள் வீட்டு குழாயா?
மேட்டூர் அணையில் இருந்து நினைத்த போதெல்லாம் தண்ணீர் திறக்க வேண்டும் காவிரி என்ன என் பாக்கெட்டிலா உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் மேட்டூர் அணை என்ன எங்கள் வீட்டு குழாயா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சரின் அலட்சிய பேச்சு
மேட்டூர் அணையில் இருக்கும் நீரை திறந்தால் நான்கு நாளைக்கு தான் வரும். அதை நம்பி எப்படி விவசாயம் செய்யமுடியும் என்றும் அமைச்சர் துரைக்கண்ணு கேள்வி எழுப்பினார். மூன்று ஆண்டுகளாக குருவை சாகுபடி செய்யமுடியாமல் போன நிலையில் அமைச்சரின் இந்த அலட்சிய பேச்சு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.