வண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா? லியோனி விளக்கம்
Recommended Video
சென்னை: திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி வண்ணாரப்பேட்டையில் கூட்டம் நடத்திய பிறகுதான் அங்கு கலவரம் ஏற்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், தான் தவறாக ஏதும் பேசவில்லை என லியோனி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற இஸ்லாமியர்களின் போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறுகையில், தவறான புகைப்படத்தை வைத்து வதந்தி பரப்பி வண்ணாரப்பேட்டையில் கலவரம் ஏற்பட்டதாகவும், விஷமிகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வண்ணாரப்பேட்டையில் திமுக கூட்டம் நடத்தியது. அக்கட்சி பேச்சாளரான திண்டுக்கல் ஐ லியோனி உரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு பிறகு தான் போராட்டம் வெடித்தது. வண்ணாரப்பேட்டையில் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்களால், குடியரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஏற்க முடியவில்லை என்றுதான் நான் தெரிவித்திருந்தேன்.
தங்கள் மார்க்கத்தை விடவும் இந்த மண்ணை இஸ்லாமியர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது என்பதையும் நான் தெரிவித்திருந்தேன்.
ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படும் போது இயல்பாக அவர்கள் கோபப்படுவார்கள். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவார்கள். இதில் தூண்டிவிட எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், கிறிஸ்தவர் என யார் பாதிக்கப்பட்டாலும், திமுக போராடும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications