அப்பல்லோவில் என்ன நடந்தது… பி. எச். பாண்டியன் பரபரப்பு தகவல்
அப்பல்லோவில் என்ன நடந்தது என்று பி. எச். பாண்டியன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இறந்து 2 மாதம் கழித்து அப்பல்லோவில் என்ன நடந்தது என்ற பரபரப்பு தகவலை முன்னாள் சபாநாயகர் பி. எச். பாண்டியன் கூறியுள்ளார்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர் பி. எச். பாண்டியன். அவர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் என்னென்ன நடந்தது என்று செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுய நினைவில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு என்ன நடந்தது என்று யாருமே யாருக்குமே தெரிவிக்கவில்லை. காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து காரணமாக அனுமதிக்கப்பட்டார் என்று வெளியில் செய்திகள் வந்தாலும் ஜெயலலிதாவிற்கு உண்மையில் என்ன நடந்தது என்று யாரும் எதுவும் சொல்லவில்லை.
தொடர்ந்து 15 நாட்கள் நான் அங்கேயே இருந்தேன். எனக்கும் எந்த பதிலையும் சொல்லவில்லை. இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிய பின்னர் அப்பல்லோ பக்கம் யாருமே வரவில்லை. தேர்தல் முடிந்தபின்னர்தான் அனைவரும் அந்தப் பக்கம் வந்தார்கள்.
ஜெயலலிதா மறைந்த பின்னர், அவரது உடலை பதப்படுத்துவதற்கு முன்னர் நான் பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ கேட்டும் மருத்துவ நிர்வாகம் என்னை அனுமதிக்கவே இல்லை என்று பரபரப்பு தகவல்களை பி. எச். பாண்டியன் கூறியுள்ளார்.