அண்ணாசாலை புரட்சியில் உதயமானது தமிழ்நாட்டு கொடி!
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு இன்று மாலை இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலக பிரமுகர்கள தமிழ் கொடி ஏந்தி அண்ணாசாலையில் போராடினர்.
கர்நாடாவிற்கு சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தனிக்கொடி வைத்துக்கொள்ள அம்மாநில அரசு முடிவு செய்து மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக திரைப்பட இயக்குநர்களும், தமிழகத்திற்கான தனிக்கொடியுடன் போராட அழைப்புவிடுத்திருந்தனர்.
கட்சி சார்பற்று போராட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய பாரதிராஜா தலைமையிலான இயக்குநர்கள் அழைப்புவிடுத்திருந்தனர்.
இந்த கொடி நீல வண்ண பின்னணி கொண்டது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கொடிகளில் இடம்பெற்றிருந்தன, முறையே, வில்-அம்பு, புலி, மீன் ஆகியவை இக்கொடியின் நடுநாயகமாக இடம் பெற்றுள்ளன. சிவப்பு வண்ணம் ஒன்று குறுக்கே செல்வதை போல அமைந்தது இந்த கொடி.
கர்நாடகாவை போல காஷ்மீர் மாநிலத்திற்கும் தனிக்கொடி உள்ளது குறிப்பிடத்தக்கது.