அடுத்த தேர்தலில் கட்சி எனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன கியாரண்டி? தம்பிதுரை டவுட்!
அடுத்த தேர்தலில் கட்சி தனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கரூர்: அடுத்த தேர்தலில் கட்சி தனக்கு சீட்டு கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது.
ஒரு சில தொழிலதிபர் நலனுக்காக விவசாயிகளை பாதிக்கும் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்காது. 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். மக்களை சந்திப்பது எனது கடமை, அடுத்த தேர்தலை நினைத்து நான் மக்களை சந்திக்கவில்லை. அடுத்த தேர்தலில் கட்சி எனக்கு சீட் கொடுக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.