For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5ம் தேதிக்கு பிறகு என்ன செய்யப் போகிறாரோ அழகிரி.. திகிலில் திமுக!

அழகிரி ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்த உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அழகிரி-ஸ்டாலின் சண்டை | திமுகவுக்குள் பதற்றம்? | அழகிரியின் அடுத்த மூவ்- வீடியோ

    சென்னை: செப்டம்பர் 5-ம் தேதிக்கு பிறகு அழகிரி என்ன செய்ய போகிறாரோ என்ற திகில் எண்ண ஓட்டம்தான் திமுக தரப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஸ்டாலினுக்கும் - அழகிரிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். கருணாநிதியை அடக்கம் செய்த நாளிலிருந்து அது இன்னும் வெடித்து பெருகி வருகிறது.

    அழகிரியை கட்சியில் சேர்த்துகொள்வதா, வேண்டாமா, பொறுப்பை கொடுப்பதா, வேண்டாமா, அப்படியே கொடுத்தாலும் எந்த பொறுப்பை கொடுப்பது, கொடுத்தால் வாங்கிப்பாரா, மாட்டாரா, அந்த பதவியை நிர்வகிப்பாரா, மாட்டாரா? மூத்த தலைவர்களின் பேச்சை மதிக்கவும் வேண்டுமே, குடும்ப உறுப்பினர்களின் வார்த்தைகளையும் கவனிக்க வேண்டுமே? என்று "இப்பவே கண்ண கட்டுதே" என்றிருந்தார் ஸ்டாலின்.

    அழகிரி எங்கே

    அழகிரி எங்கே

    ஆனால் அழகிரியோ அவ்வப்போது என்று எதையாவது சொல்லி கிளப்பி விடுகிறார். ரஜினி ஆதரவு, தனி கட்சி இல்லை, என் பக்கம்தான் திமுக விசுவாசிகள் என்று திடீர் திடீரென சொல்லி திமுக தலைவர்கள், தொண்டர்களின் வயிற்றில் புளியை கரைத்து விடுகிறார். ஆனால் இதுவரை எதையுமே அழகிரி முழுசா செய்த மாதிரியும் தெளிவா செய்த மாதிரியும் தெரியவில்லை.

    பின்னணியில் பாஜக இருக்கா

    பின்னணியில் பாஜக இருக்கா

    மு.க. அழகிரிக்கு பின்னால் பாஜக இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ரஜினியை ஏன் தன் பேச்சினுள் கொண்டு வருகிறார், அஞ்சலி செலுத்த வந்த மோடி, அழகிரி எங்கே என்று ஏன் கேட்டார் என்பதற்கு இன்னும் யாருக்கும் விடையே கிடைக்கவில்லை.

    மவுன ஊர்வலம்

    மவுன ஊர்வலம்

    இதனிடையே வருகிற 22-ம் தேதி மதுரையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த போவதாக கூறப்படுகிறது. அதில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அதேபோல, சென்னையிலும் வருகிற 5-ம் தேதியுடன் கருணாநிதி இறந்து 30-நாள் ஆகிறது. அன்றைய தினம் சென்னையில் மவுன ஊர்வலம் ஒன்றையும் அழகிரி நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்ன செய்ய போகிறார்?

    என்ன செய்ய போகிறார்?

    அழகிரி 5-ம் தேதிக்கு பிறகு என்னதான் செய்ய போகிறார்? தன் பலத்தை காட்ட போகிறாரா? தான் புதிய கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்ல போகிறாரா? தன் நிலைப்பாடு இதுதான் என்று அறிவிக்க போகிறாரா? இல்லை... திரும்பவும் வேற முக்கிய புள்ளி பெயர்களை சொல்லி கிளப்பி விடப் போகிறாரா? எதுவுமே புரியவில்லை.

    ஆனால் அழகிரியின் சாதுர்ய மிரட்டல் மட்டும் தொடர்கிறது... 5-ம் தேதி வரை திமுகவின் டாப் டூ பாட்டம் மண்டை காய போவது நிச்சயம்!

    English summary
    What is the next stance of Azhagiri
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X