ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகள் செய்ய இன்று நல்ல நேரம் எப்போது தெரியுமா!
Recommended Video
சென்னை: இன்று ஆயுத பூஜை. பைக், கார் மட்டுமின்றி சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு குதுகலிப்பீர்கள். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து, சரஸ்வதி கடாட்சம் வேண்டி வழிபடுவீர்கள்.
இந்து சம்பிரதாயத்தில் நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதை கோள்களின் நிலைகளை வைத்து பார்த்து, அதற்கேற்ப நல்ல முயற்சிகளை செய்வது மரபு. அதன்படி, இன்று வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 10.45 முதல் காலை 11.45 மணி வரை நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் பூஜை செய்ய முடியாவிட்டால், மதியம் 12.15 முதல் 1.15 வரை கவுரி நல்ல நேரமாகும். அப்போது பூஜை செய்யலாம்.
காலை 6 மணி முதல் 7.30 மணிவரை எம கண்டமாகும், காலை 9 மணி முதல் 10.30 மணிவரை குளிகை, மதியம் 1.30 மணி முதல் 3 மணிவரை ராகு காலம் என்பதால் இந்த நேரங்களில் பூஜை செய்வதை தவிர்க்கலாம்.
மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை கவுரி நல்ல நேரமாகும். பகலில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு நேரம் மாறிக்கொண்டே இருப்பதால் குழம்ப வேண்டாம். இரவு குறிக்கப்பட்டுள்ள இந்த நல்ல நேரத்தில் பூஜைகளை மேற்கொண்டு மகிழ்ச்சியடைவீர்களாக.