காவிரி ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு என்ன பேசியது என்று வெளியிடுங்கள்.. ஸ்டாலின் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு வைத்த வாதங்களை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை இருக்கிறார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு வைத்த வாதங்களை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை இருக்கிறார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.
கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு. மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு இதில் முடிவெடுக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து, காவிரி தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, டெல்லியில் இன்று நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூட்டத்தின் முடிவில் கூறியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் பற்றி தீர்ப்பில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மேலும் காலதாமதமும், எந்த விதமான குழப்பம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.