ஓ காட்.. கோல்டன் பே ரிசார்ட்ஸ் ஓனர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறாராமே.. வாட்ஸ்ஆப் அலப்பறை!
கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் தன்னிடம் 130 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சியமைக்க உரிமை கோருவதாக ஜோக் ஒன்று வலம் வருகிறது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஆட்சியமைக்க உரிமை கோருவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு "குபீர் சிரிப்பு" ஜோக் வைரலாக பரவி வருகிறது.
சசிகலாவின் அதிமுகவை வைத்து மக்கள் கடுமையாக "செய்து" வருகிறார்கள். யாராலும் ஏற்க முடியாத மாபெரும் "தலைவராக" மாறி விட்டார் சசிகலா. இந்த நிலையில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களை கூவத்தூர் என்ற இடத்தில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸில் தங்க வைத்துள்ளனர் அதிமுகவின் சசிகலா ஆதரவாளர்கள்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை வைத்து ஒரு ஜோக் வாட்ஸ்ஆப்பில் வலம் வருகிறது. அதில், தன்னிடம் (அதாவது ரிசார்ட்ஸில்) 130 எம்.பிக்கள் இருப்பதால் கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் என்று போட்டுள்ளனர்.
அடடே.. !