கருணாஸ் கைது செய்யப்பட்டதுதான் தாமதம்... ஆதரவாளர்கள் அலறி அடித்து ஓட்டம்!
Recommended Video
சென்னை: கருணாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்து அவரது ஆதரவாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் கொலை வெறியை தூண்டும் வகையில் பேசினார்.
கைது
இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.
ஆதரவாளர்கள்
அவரது சாலி கிராமம் வீட்டில் வைத்து கைது செய்த போலீஸார் அவரை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதனிடையே அண்ணனை கைது செய்யக் கூடாது என தடுத்தவர் அவரது ஆதரவாளர்கள் அச்சம் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆதரவாளர்கள்
எனவே கருணாஸ் ஆதரவாளர்கள் புடைச்சூழாமலேயே காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பதுதான் நகைப்புக்குரிய செய்தி. அண்ணன் முன்பு தாட் பூட்டுனு குதித்த ஆதரவாளர்கள் அவர் உள்ளே சென்றவுடன் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
தப்பி ஓட்டம்
மற்ற தலைவர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டால் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்கு சென்று கோஷமிடுவர், ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஆனால் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கைதானவுடன் ஆதரவாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தது பெரும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.