அன்று முறைப்பு.. இன்று சிரிப்பு.. ஓபிஎஸ்-வளர்மதி நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம்
சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று, கிண்டியிலுள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்திநர். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், தமிழக அரசால் நேற்று பெரியார் விருது பெற்ற பா.வளர்மதியும் பங்கேற்றார்.
அப்போது வளர்மதியும், பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அது போட்டோவாக கிளிக்கானது.
வளர்மதி, சசிகலா அணியில் இருந்தவர். எனவே சசிகலா அணியினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்தபோது, பன்னீர்செல்வத்தை பல பொதுக்கூட்டங்களில் வறுத்தெடுத்தார் வளர்மதி.
ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், எடப்பாடி அணி சார்பில் தினகரனும் போட்டியிட்டபோது பன்னீர்செல்வம் அணி வெல்ல வாய்ப்பு இருப்பதாக கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்தார் நிர்மலா பெரியசாமி. இதற்காக அவரை கட்சியை விட்டே வெளியே போக வேண்டும் என வரிந்து கட்டியவர் வளர்மதி.
இந்த சூழலில் பன்னீர்செல்வம்-வளர்மதியின் இந்த நட்பு சிரிப்பு பத்திரிகையாளர்களின் விவாத பொருளாகியுள்ளது.