ஜெயலலிதாவின் மூச்சை நிறுத்தச் சொன்னது யார்.. பி.எச்.பாண்டியன் பரபர கேள்வி!
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார் என பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணி ஆதரவாளருமான பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களாக என்றும் அவர் வினவியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர் இன்று பல்வேறு புதிய குண்டுகளை போட்டுள்ளனர்.
சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார்?
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன் மற்றும் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிஎச்.பாண்டியன் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை நிறுத்தச்சொன்னது யார் என அவர் கேள்வி எழுப்பினார்.
குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்களா?
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை யாருடைய அனுமதியுடன் அப்பல்லோ மருத்துவர்கள் நிறுத்தினார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெ.கடுமையாக தாக்கப்பட்டார்
அவர் காயத்துடனே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பிஎச்.பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.
எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்?
மேலும் ஜெயலலிதா எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எந்த நிலைமையில் என்று சேர்க்கப்பட்டார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பிஎச்.பாண்டியன் கேள்வி எழுப்பினார்.