அன்று எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 'வக்கிர' முகத்தை அம்பலப்படுத்தியவர் 'தமிழச்சி'!
சென்னை: தற்போது சுவாதி கொலை வழக்கில் முத்துக்குமார் என்பவரை முன்னிறுத்தி பரபரப்பை கிளப்பியுள்ள 'பிரான்ஸ்' தமிழச்சி இதற்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதாவின் ஆபாச வக்கிர முகத்தையும் அம்பலப்படுத்தியவர்.
சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப்பட்டவர் சாருநிவேதிதா. சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் எழுத்து துறையில் கால் பதிக்க விரும்புகிறார். ஃபேஸ்புக்கில் தனிப்பக்கத்தை உருவாக்கி கவிதைகளை போடுகிறார்... பின்னர் சாருநிவேதிதாவின் வாசகர் வட்டத்துடன் இணைய அப்பெண்ணின் நட்புவட்டம் விரிகிறது.
இதில் வேடிக்கை என்னவெனில் இணையம் மூலமே சாருநிவேதிதா ஒரு பிரபல எழுத்தாளர் என்பதை அறிந்திருந்தார் அந்த பெண். ஆனால் சாருநிவேதிதாவின் எந்த ஒரு எழுத்தையும் அவர் படித்து இல்லை.
சாருவுடன் சாட்டிங்
இந்த நிலையில் சாருநிவேதிதாவுடன் அப்பெண் சாட்டிங் செய்ய தொடங்குகிறார்... ஒரு பிரபலத்துடன் சாட்டிங் செய்வதை பெருமையாகவும் அப்பெண் கருதி ஃபேஸ்புக் பக்கங்களில் பகிரத் தொடங்குகிறார்.
அதிரவைத்த சாரு
ஆனால் போகப் போக அந்த இளம்பெண்ணை தம்முடைய வலையில் வீழ்த்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சாருநிவேதிதா சாட்டிங் செய்கிறார்... இதில் அதிர்ந்து போகிறார் அந்த இளம்பெண்.
தமிழச்சியுடன்...
அப்போது இணையத்தில் தீவிரமாக இயங்கி வந்த 'பிரான்ஸ்' தமிழச்சியுடன் அந்த இளம் பெண்ணுக்கு நட்பு ஏற்படுகிறது...அவரிடம் சாருநிவேதிதாவின் இந்த நடத்தை குறித்து சொல்கிறார்...
ஸ்கிரீன்ஷாட்...
விடுவாரா தமிழச்சி.... சாரு நிவேதிதாவுடனான அந்த இளம்பெண்ணின் அத்தனை உரையாடல்களையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைக்க... "சுபயோக சுபதினத்தில்" இணையவெளியில் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
சுவாதி கொலையிலும்...
அப்போது அந்த இளம்பெண்ணின் முகத்தையும் பெயரையும் மறைக்க அந்த ஸ்கீன்ஷாட்களில் தன் முகத்தை போடவும் அனுமதித்தவர்தான் இந்த தமிழச்சி.. இப்போது சுவாதி கொலையில் திடுக்கிடும் தகவல்களை களமிறக்கி வருகிறார்... க்ளைமாக்ஸ் என்னவோ?