For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கான கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற்றது யார்.. மனோஜ் பாண்டியன் கேள்வி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார் என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுடன் இருந்த கருப்புப் பூனைப் படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார் என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி,காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில கொண்டு செல்லப்பட்டார். 75 நாள்களுக்கு பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

Who is taken back the Black cats? asks Manoj Pandian

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு மர்மங்கள் உள்ள நிலையில் தற்போது மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையைக் கொண்டு சென்னையில் செய்தியாளர்களை மனோஜ் பாண்டியன் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கருப்புப் பூனை படைகளை திருப்பி அனுப்பியது யார்? அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார் ?

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 23 சி.சி.டி.வி. கேமராக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது யார்? அவரது கன்னத்தில் இருந்த துளைகளை மருத்துவர்கள் கவனிக்காதது ஏன். அவரது ரத்த சொந்தங்கள் இல்லாமல் அவரது மூச்சை நிறுத்த அதிகாரம் கொடுத்தது யார்? என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Who ordered to take back the Black cats security provided to Jayalalitha, asks Manoj Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X