For Daily Alerts
Just In
தமிழக ஆளுநர் பொறுப்பை கவனிக்கும் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ்.. இதோ அவரை பற்றி சில தகவல்கள்!
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ளார் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ள மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பற்றிய விவரங்கள்.
- தெலங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகரைச் சேர்ந்தவர் வித்யாசாகர் ராவ்
- ஹைதராபாத்தில் பிஎஸ்சி கல்லூரிப் படிப்பை முடித்தவர். பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார்.
- சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார் வித்யாசாகர் ராவ்
- 1972-ல் கரீம்நகர் மாவட்ட ஜனசங்கத்தின் தலைவராக இருந்தார்.
- மெட்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் ஆந்திர சட்டப்பேரவைக்கு 1985-ல் தேர்வு செய்யப்பட்டார்.
- 1998-ல் கரீம் நகர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
- அதே ஆண்டு ஆந்திரப் பிரேதச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
- 1999-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று தேசிய அரசியலில் அறிமுகமானார்.
- பின்னர், அதே ஆண்டில் இலாகா மாற்றப்பட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
- 2014 ஆகஸ்ட் மாதம், வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர மாநில அளுநராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
- தற்போது, தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
Comments
English summary
President Pranab Mukherjee gave Maharashtra Governor C. Vidyasagar Rao additional charge of Tamil Nadu