அன்புமணி ராமதாஸின் திடீர் தாடியின் பின்னணி ரகசியம் இதுதான்!
Recommended Video
சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் திடீர் தாடியின் பின்னணி ரகசியம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
எப்போதும் பளபளவென ஷேப் செய்து பளீச்சென காட்சியளிப்பார் அன்புமணி. இந்நிலையில் சில நாட்களாக அவர் தாடியுடன் காட்சி தருகிறார். இது குறித்து ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறி கொண்டனர்.
மேலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காகவே அவர் தாடி வைத்துக் கொண்டுள்ளார் என்ற கிண்டல்களும் உலா வந்தன. இதுகுறித்து அன்புமணியிடம் விசாரிக்கையில் ஒரு அப்பாவாக எனது மகள்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன்.
எனது மகள்கள் சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா ஆகியோரின் ஆசைக்காக தாடி வளர்க்கிறேன் என்று கூறினார் அன்புமணி. இதையடுத்து அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்தன.
இன்று உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்புமணி மகள்களுக்காக தாடி வைத்துள்ளதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.