அழகு நிலையத்தில் பெண்ணை தாக்கிய விவகாரம்.. கைதான செல்வகுமார் சொல்லும் காரணத்தை பாருங்க
Recommended Video
பெரம்பலூர்: அழகு நிலையம் நடத்தும் பெண்ணை தாக்கிய பிரச்சினையில், திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் அங்கு பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
அந்த அழகு நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், சத்யாவை கடுமையாக தாக்கினார். ஏதோ கூறியபடி அவர் தாக்குதல் நடத்தினார். சக பெண்கள் தடுக்க முற்பட்டும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை.
சிசிடிவி காட்சிகள்
செல்வகுமார் பயங்கரமாக எட்டி உதைத்து தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள், வைரலாக பரவின. பெண் என்றும் பாராமல் அவர் மீது செல்வக்குமார் எட்டி உதைக்கும் காட்சிகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நாடு முழுக்க
இந்த சம்பவம் நாடு முழுக்க ஊடகங்களில் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரியாணி கேட்டு சென்னையில் ஒரு ஹோட்டலில் திமுக நிர்வாகி, தாக்குதல் நடத்திய வீடியோவும் நாடு முழுக்க வைரலாகி இருந்தது.
|
திமுக நடவடிக்கை
இதுபோன்ற சம்பவங்களையடுத்து, கோபமடைந்த திமுக தலைமை, செல்வகுமாரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இதுபோன்ற அடாவடிகளை திமுக தலைமை பொறுத்துக்கொள்ளாது என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காரணம் என்ன
இந்த நிலையில் நேற்று போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் நிருபர்களிடம் பேசிய செல்வகுமார், "இதற்கெல்லாம் காரணம், திமுக நகர செயலர் பிரபாகரன் தான். அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதற்கெல்லாம் காரணம்" என, கூறி சென்றார்.