வாழ்க்கையில் முக்கியமான உழைப்பாளி யார்?...மனதில் கனத்தை ஏற்படுத்தும் வீடியோ பதிவு! #savefarmers
கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவைக சமூக வலைதளங்களில் பல்வேறு பகிர்வுகள் வலம் வருகின்றன, அதில் மனதைக் கலங்க வைக்கும் ஒரு பதிவு தான் இது.
சென்னை : தங்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல விவசாயமும் கேள்விக் குறி என்ற பதற்றத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு திரட்டும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.
நகரமயமாக்கல், வறட்சி காரணமாக நாம் மறந்து விட்ட ஒரு தொழில் விவசாயம். இன்றைய பரபரப்பான உலகத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது திருமணம், குழந்தை, அவர்களின் கல்வி, சொகுசான வாழ்க்கை என்றே நகர்ந்து கொண்டிருக்கிறது.
எந்த ஒரு படிப்பாளியும் விவசாயத்தை தனது தொழிலாக நினைப்பதில்லை. ஏன் பலருக்கு நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டால் மற்ற சட்டென நினைவுக்கு வருவது டாக்டர், என்ஜினியர் மட்டுமே. வாழ்வில் என்றோ ஒரு நாள் தேவைப்படும் இவர்களைவுட 3 வேளை உணவிடம் விவசாயயியைப் பற்றி யாரும் நினைப்பதில்லையே ஏன்?
நமது டைனிங் டேபிளுக்கு வரும் ருசியான உணவிற்காக எங்கோ ஒரு மூளையில் சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறான் உழவன். இதந்த உழவனை நினைவுகூரும் வகையிலான பதிவு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கன்னத்தில் ஒரு அறை விட்டு மனதை கணப்படுத்தும் இந்தப் பதிவை நீங்களும் பாருங்கள். கதிராமங்கலம், நெடுவாசலில் போராடும் விவசாயி எதற்காகப் போராடுகிறான் என்பதை உணருங்கள்.