பா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது? தமிழக அரசின் அதிரிபுதிரி விளக்கம்
சென்னை: பா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது வழங்கப்பட்டது என்பதற்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள தகுதியுரையில் விளக்கம் உள்ளது.
பெரியார் விருதை முன்னாள் அமைச்சர், பா.வளர்மதிக்கு தமிழக அரசு இன்று வழங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட தகுதியுரையில், "தந்தை பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு கொண்டு பொது வாழ்வுக்கு வந்து, மேடைப் பேச்சுகள் மூலம் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தங்களைப் பரப்பி வருகிறார். பெரியாரின் கொள்கைகளின்படி சாதி மறுப்புத் திருமணங்கள், விதவைத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் ஆகியவற்றை நடத்தி வைத்துள்ளார். மேலும், பெண் கல்வி, மகளிர் முன்னேற்றம், பெண்ணடிமை ஒழிப்பு, வரதட்சணை மறுப்பு ஆகிய சமூக பணிகளை செய்து வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.