மதுரை முக்கிய பிரமுகருக்கு 'குறி' வைத்ததால் போலீஸ் என்கவுண்ட்டர்?
மதுரையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளும் முக்கிய நபரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
Recommended Video
மதுரை: மதுரையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளும் முக்கிய நபரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.
மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே பொட்டப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளாண்டி (29). இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இவர் மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான சகுனி கார்த்தி (30) என்பவருடன் மதுரையில் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்பட்டது.
சதி திட்டம்
இருவரும் மதுரை - திண்டுக்கல் சாலையில் உள்ள சிக்கந்தர் சாவடியில் ஒரு வீட்டில் இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தற்காப்புக்காக...
இதையடுத்து அந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் சேர்ந்து தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தற்காப்புக்காக போலீஸாரும் திருப்பி சுட்டனர்.
ரவுடிகள் பிடிப்பட்டால்
இதில் இரு ரவுடிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும் அவர்கள் யாரை கொல்ல சதி திட்டம் தீட்டினர் என்பது குறித்து தெரியவில்லை. அவர்களுடன் தொடர்புடைய மற்ற ரவுடிகள் பிடிபட்டால் மட்டுமே இது தெரியும்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தால் ரவுடிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சதியை செயல்படுத்த மற்ற ரவுடிகளிடம் இவர்கள் ஏதேனும் கூறியிருக்கலாம் என்றும் அவர்கள் அதை எக்ஸிகூட் செய்வதற்குள் அவர்களை பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.