For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழகாய் இல்லை... மணமான 9 நாளில் அம்மிக்கல்லைப் போட்டு கணவனைக் கொன்ற இளம்பெண்

அழகாய் இல்லை என்பதற்காக திருமணமான 9வது நாளில் கணவன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கடலூர்: திருமணமாகி ஒன்பதே நாளில் கணவரது தலையில் அம்மிக் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது.

இன்று அதிகாலையில் ரமேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி போலீசார், ரமேஷின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Wife murders husband for 'not being handsome enough'

படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரமேஷின் மனைவியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் அழகாக இல்லை என்றும், அப்பாவியாக நடந்து கொண்டதால் அக்கம் பக்கத்தின் கிண்டல் செய்ததாகவும் கூறினார். இதனால் வெறுப்படைந்தே நள்ளிரவில் அம்மிக்கல்லை கணவரது தலையில் போட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணமாகி ஒன்பதே நாளில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A newly married woman smashed his head with a grinding stone killing him. The 22-year-old, the police said, murdered her husband and later attempted to shift the blame by claiming innocence. Barely married for a week, the wife is said to have smashed the man's head with a household grinding stone after a quarrel on Monday night in Cuddalore of Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X