அழகாய் இல்லை... மணமான 9 நாளில் அம்மிக்கல்லைப் போட்டு கணவனைக் கொன்ற இளம்பெண்
அழகாய் இல்லை என்பதற்காக திருமணமான 9வது நாளில் கணவன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்: திருமணமாகி ஒன்பதே நாளில் கணவரது தலையில் அம்மிக் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது.
இன்று அதிகாலையில் ரமேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி போலீசார், ரமேஷின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரமேஷின் மனைவியை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் அழகாக இல்லை என்றும், அப்பாவியாக நடந்து கொண்டதால் அக்கம் பக்கத்தின் கிண்டல் செய்ததாகவும் கூறினார். இதனால் வெறுப்படைந்தே நள்ளிரவில் அம்மிக்கல்லை கணவரது தலையில் போட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
திருமணமாகி ஒன்பதே நாளில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.