For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் அரசியல் செய்யவில்லை.. தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் தயார்.. ஆளுநர் உறுதி

காவிரி விவாகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை, தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தயாராகி வருகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியை ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு

    சென்னை: காவிரி விவாகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை, தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தயாராகி வருகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியுள்ளார்.

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிண்டி ஆளுநர் மாளிகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி வருகிறார். தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடங்கி காவிரி பிரச்சனை வரை அனைத்து பற்றியும் அவர் இதில் பேசினார்.

    Will do every best scheme for farmers says TN governor

    இதில் காவிரி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ''ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன். காவிரி விவகாரம் பற்றி நிதின் கட்ரியிடம் எடுத்துரைத்தேன். இதில் விரைவில் நல்ல செய்தி வெளியாக வாய்ப்பு இருக்கிறது'' என்றுள்ளார்.

    மேலும் ''காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. கட்கரியிடம் பேசிய பிறகு அவர் மிகவும் தீவிரமாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன். விவசாயிகள், தமிழக நலனுக்கான திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும்'' என்றுள்ளார்.

    English summary
    Will do every best scheme for farmers says TN governor Banwarilal Purohit in press meet. He says that he has talked about Cauvery issue with the central government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X